கடலூர் அருகே கோர விபத்து - 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நின்று கொண்டிருந்த கார் மீது மணல் லாரி மோதி, அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள் உட்பட நான்கு வாகனங்கள் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் அப்பளம் போல் கார் நொறுங்கியது. 

இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் மற்றும் ஒரு ஆண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, காரில் சிக்கிய உடல்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed including children died in a terrible accident near Cuddalore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->