ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 210 கிலோ கஞ்சா பறிமுதல்.! இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 210 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரவு 11 மணி அளவில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு நபர் சாக்கு பையுடன் வந்துள்ளார்.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 21 கிலோ எடையுள்ள 10 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த நபரை விசாரணை செய்ததில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார்(21) என்பதும், அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A person arrested for cannabis smuggler in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->