தமிழகத்தை போல உ.பி-யில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம்! துடிதுடித்த மாணவி... 4 பேர் கைது!
UP College Girl Harassment case
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் கல்லூரி மாணவி ஒருவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 21-ம் தேதி மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிய 17 வயது பிடெக் மாணவிக்கு, ஹிமான்ஷு என்ற நபர் இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்துள்ளார்.
பின்னர், மாணவியை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று ஹிமான்ஷு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் செயலுக்கு அவரது நண்பர்களான சாகிர், சித்தார்த் மற்றும் ஆதேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். மாணவி வீடு திரும்பியதும் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஹிமான்ஷு மற்றும் அவரது நண்பர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த வருடம் தமிழகத்தின் தஞ்சையில் லிப்ட் கொடுத்து பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பதக்கது.
English Summary
UP College Girl Harassment case