ஊட்டியில் அடுத்தடுத்து நிலவும் சம்பவங்கள்!...அதிரடியாக நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து! - Seithipunal
Seithipunal


குன்னூரில் பெய்த பலத்த மழை காரணமாக, மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான ரயில் தண்டவாளத்தில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ள வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில்  ஊட்டி, கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்படி, மதியம் ஒரு மணிக்கு தொட ங்கிய மழை பிற்பகல் 3 மணி வரை இடைவிடாமல் பெய்ததால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

ஊட்டி சவுத்வீக் பகுதியில் இருந்து வந்த மழைநீர், சேரிங்கிராஸ் பகுதியில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். புறநகர் பகுதியில் பெய்த மழையால் விவசாய தோட்டங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நின்றது.

இதே போல் குன்னூரில் பெய்த பலத்த மழை காரணமாக, மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான ரயில் தண்டவாளத்தில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது. இதையடுத்து ராட்சத பாறையை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A series of incidents in ooty train traffic stopped immediately


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->