ஏ.வி ராஜூவுக்கு ஆப்பு‌ ரெடி.. நடிகை திரிஷா அனுப்பிய அதிரடி நோட்டீஸ்.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் அதிமுக சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, சில நாட்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் பேசியதை அடுத்து, அவருக்கு நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில் ஏ.வி.ராஜுவின் பேச்சால், த்ரிஷா 4 நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இதனால் குறிப்பிட்ட தொகையை அவருக்கு கொடுக்க வேண்டும் என அந்த வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்திலும் எந்த வகையிலும் த்ரிஷாவிற்கு எதிராக வேறு எந்த அவதூறான வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அவரது சொந்த செலவில், அச்சு, மின்னணு, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இடங்களில் த்ரிஷா குறித்து அவர் பேசியுள்ள, வெளியிட்டுள்ள அவதூறான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் அனைத்து பதிவுகளையும் உடனடியாக நீக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இந்த அறிவிப்பை பெற்ற 24 மணி நேரத்திற்குள் த்ரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு, புழக்கத்தில் உள்ள 5க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற தேசிய ஆங்கில நாளிதழ் மற்றும் 5 லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்கப்படும் தமிழ் நாளிதழ் ஆகியவற்றில் மன்னிப்பை வெளியிட வேண்டும் எனவும் ஏ.வி.ராஜூவிற்கு அனுப்பப்பட்ட சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும், யூடியூப் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களின் வாயிலாக மன்னிப்பை வெளியிட வேண்டும் என்றும் அந்த வக்கீல் நோட்டீஸில் தெரிவித்துள்ளார் த்ரிஷா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Trisha send advocate notice to avraju


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->