எப்படி ஜெயலலிதாவை திட்டமிட்டு கொலை செய்தார்களோ? அதேபோல் ஆம்ஸ்ட்ராங்கையும் கொலை செய்துள்ளனர் - நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்! - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி, இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பாக நினைவேந்தல் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணிகள் அட்டகத்தி படத்தின் நாயகன் தினேஷ், மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள்  பங்கேற்றனர். மேலும், திரைப்பட நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் கலந்து கொண்டார்.

பின்னர், இந்த நிகழ்ச்சியில் பேசிய மன்சூர் அலிகான், "பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெட்கி தலை குனிகிறேன்.

எனக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த பழக்கமும் இல்லை. திட்டமிட்டுதான் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. பச்சைக் குழந்தை போல் சிரித்துக் கொண்டிருக்கும் மனிதரை நாம் இழந்து விட்டோம்.

நான் அவருடன் பேசி பழகாமல் இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறேன். எப்படி ஜெயலலிதாவையும், காந்தியையும் திட்டமிட்டு கொலை செய்தார்களோ? அதேபோல் ஆம்ஸ்ட்ராங்கையும் கொலை செய்துள்ளனர்" என்று நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.

முன்னதாக, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜகன் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், "ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெறும் இந்த பேரணியில் ஒரு சில இளைஞர்கள் தான் பங்கேற்று உள்ளனர். 

ஆனால், பட்டியலின மக்கள் ஒன்றுபட்டு சென்னையை நோக்கி படையெடுத்தால், தமிழ்நாடு தாங்காது. ஆம்ஸ்ட்ராங்கை சதி திட்டம் தீட்டி கொலை செய்துள்ளனர். அதுவரை தமிழக உளவுத்துறை என்ன தான் செய்து கொண்டிருந்தது? என்று கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong case Mansoor Ali Khan speech


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->