மீண்டும் வெளியாகும் மன்மதன் மற்றும் மாநாடு திரைப்படம்; சிம்பு ரசிகர்கள் உற்சாகம்..! - Seithipunal
Seithipunal


சிம்பு மற்றும் ஜோதிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த 'மன்மதன்' திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். 2004 ஆம் ஆண்டு ஏ.ஜே முருகன் மற்றும் சிலம்பரசன் இயக்கத்தில் இந்த படம் வெளியானது. படத்தில், கவுண்டமனி, சிந்து, துல் குல்கர்னி, சந்தானம், சத்யன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 'மன்மதன்' வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. 

இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படம் மீண்டும் நாளை (ஜனவரி 31 )வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாமகமடைந்துள்ளனர். 

இவர் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படமும் நாளை மீண்டும் மீண்டும் வெளியாகவுள்ளது. சிம்பு தற்பொழுது அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படத்தில், 'தக் லைஃப்' மற்றும் சில படங்களில் நடித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manmadhan and Maanadu movie to be re released


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->