ரவுடி சீசிங் ராஜாவின் நண்பன் சஜித் கைது! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. 

இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார், தற்போது வரை 27 பேரை கைது கைது செய்துள்ள நிலையில், மேலும் 3 பேரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இயக்குனர் நெல்சன் மனைவி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரிடம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜாவின் நண்பன் சஜித் கைது செய்யப்பட்டுள்ளார். 

நான்கு கொலைகள், ஐந்து கொலை முயற்சி என பல்வேறு வழக்குகளில் சம்பந்தபட்டுள்ள சஜித் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று தாம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சஜித்திடம் தாம்பரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரவுடி சீசிங் ராஜா குறித்தும், ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்தும் சஜித்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong case Rowdy Raja Friend arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->