அதிரடியாக உயர்ந்த பால், தயிர் விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் மட்டுமின்றி, பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆவின் பாலை போலவே தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளையும் மக்கள் அதிகளவு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் பால் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ள ஆரோக்யா நிறுவனம், இன்று முதல் பால் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதன்படி, நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.36இல் இருந்து 37 ரூபாயாகவும், ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.65இல் இருந்து 67 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.31இல் இருந்து 32 ரூபாயாகவும், ஒரு லிட்டர் ரூ.58இல் இருந்து 60 ரூபாயாகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30இல் இருந்து 32 ரூபாயாகவும், 500 கிராம் தயிர் ரூ.37இல் இருந்து 38 ரூபாயாகவும், 1 கிலோ தயிர் ரூ.66இல் இருந்து 68 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

arokya milk and curd price increase from today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->