தாறுமாறாக சென்ற மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து.. கல்லூரி மாணவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தடுப்புச்சுவர் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவில் எட்வர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேத்(19) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

 இந்த நிலையில் நிவேத் தனது கல்லூரி நண்பரைப் பார்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் வடசேரி காசிவிஸ்வநாதர் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் தாறுமாறாக ஓடி சாலையில் இருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நிவேத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவறிந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bike accident in kanniyakumari college student death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->