துப்பு கெட்ட காங்கிரஸ்! இதான் தான் வெட்கக்கேடு - உச்சகட்ட கோவத்தில் பாஜக புள்ளி போட்ட டிவிட்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகைக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தை போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

செல்வப் பெருந்தகையை ரவுடி என்றும், அவர் குற்ற வழக்குகளில் சம்பந்தபட்டு உள்ளார் என்றும் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த செல்வப் பெருந்தகை, அண்ணாமலை கட்சியில் இவ்வளவு பேர் ரவுடிகள் உள்ளார்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டு, தனது பெயரில் தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தில் ஏதெனும் ஒரு வழக்கு உள்ளதா? நிரூபிக்க தயாரா என்றும் சவால் விட்டு இருந்தார்.

இதற்கு செல்வப் பெருந்தகை மீது உள்ள கொலை, கொலை மிரட்டல், குண்டர் சட்ட வழக்குகளை பட்டியலிட்டு ஒரு டிவிட் ஒன்றை அண்ணாமலை போட்டு இருந்தார். 

இதற்கிடையே, இன்று காலை திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியினர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அண்ணாமலை உருவ பொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணனன் திருப்பதி, "திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவரின் கொலைக்கு காரணமானவர்களை இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அல்லது கண்டுபிடிக்காத தமிழக அரசை கண்டித்து போராட துப்பில்லை. உண்மையை உரக்கச் சொன்ன அண்ணாமலை அவர்களை கண்டிக்கிறார்களாம். துப்பு கெட்ட காங்கிரஸ்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்ட கடிதத்தைக் கூட ஒழுங்காக எழுத தெரியாத நபரையெல்லாம் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமித்தது தான் வெட்கக்கேடு" என்று கடுமையான வார்தைகளாலால் விமர்சனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan thirupathy condemn to Congress for Annamalai Selvaperunthagai issue


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->