காதலி உயிரிழந்த நிலையில் காதலன் தூக்கிட்டு தற்கொலை! - Seithipunal
Seithipunal


காதலன், காதலி உயிரிழந்ததை தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்துள்ள பெரியாண்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் சஞ்சீவி (23). இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் அடிக்கடி இருவரும் வெளியே சென்று காதலை வளர்த்து வந்தனர். 

இதனைத்தொடர்ந்து, இவர் காதலித்த பெண்ணுக்கு திடீரென உடல்நலம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டதில் இருந்து  கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், காதலி இறந்தது தாங்க முடியாமல் நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த சஞ்சீவி தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகன் தூக்கில் சடலமாக தொங்கிய பார்த்து அதிர்ச்சியில் அழுது கதறி கூச்சலிட்டனர். 

இந்த சம்பவம் குறித்து மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  சஞ்சீவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆசை ஆசையாக காதலித்த காதலி உயிரிழந்ததால் வேதனை தாங்க முடியாமல் காதலனும் தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boyfriend hanged himself while his girlfriend died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->