ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்! 30 பேர் சிக்கினர்! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிபிசிஐடி போலீசார் கிட்டத்தட்ட கொலையாளிகளை நெருங்கி விட்டனர் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த அஸ்வத்தாமன் மற்றும் அவரின் தந்தை ரவுடி நாகேந்திரன் தான் இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 28 பேரில் 25 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஒருவர் என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில்,பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP Armstrong case CBCID Police report


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->