ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அதிரவைக்கும் பின்னணி! அடுத்தடுத்து வெளியாகும் உண்மை!
BSP Armstrong hacked death case info july
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் தொடர்பாக உணவு டெலிவரி ஊழியர்களை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவு டெலிவரி செய்பவர்கள் போல ஸ்விக்கி உடையில் இருந்த 3 பேர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததால், டெலிவரி ஊழியர்களை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும், கொலை நடந்த இடத்தில் உள்ள உணவகத்திற்கு வந்த ஸ்விக்கி ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த ஒரு அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தில் வெட்டிய கொலையாளிகள், அவரின் கணுக்காலில் வெட்டி நிலைகுலையச் செய்த பின் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்த சரமாரியான தாக்குதலில் ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாக தகவல் வெளியாகியுள்ளது.
குத்துச்சண்டை தெரிந்தவர் ஆம்ஸ்ட்ராங் என்பதால், அவரை எவ்வாறு கொலை செய்வது என திட்டமிட்டு தீர்த்துக்கட்டியதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
மேலும், பிளான் பி ஒன்றையும் கொலையாளிகள் வைத்துள்ளனர். ஒருவேளை வெட்டும் போது ஆம்ஸ்ட்ராங் தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் தயார் நிலையில் வந்தது அம்பலமாகியுள்ளது.
கொலை வழக்கில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை தனது ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்துள்ளார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு திருமலை தான் தகவல் கொடுத்து உள்ளதும் அம்பலமாகியுள்ளது.
English Summary
BSP Armstrong hacked death case info july