#திருப்பத்தூர் || எருது விட தடை.. போராட்டத்தில் குதித்த மக்கள் மீது வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


வட மாவட்டங்களில் பொங்கல் திருவிழா முடிந்த பிறகு பல்வேறு கிராமங்களில் எருது விடும் திருவிழா நடைபெறுவது பாரம்பரியமான வழக்கம். குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் எருது விடும் திருவிழா பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் விழாவையொட்டி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வெள்ளை குட்டை என்ற கிராமத்தில் எருது விடும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால் சுமார் 150 பேர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறை பிடித்து சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அனுமதி இன்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் மீது தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case filled against 150 people protest for bull race


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->