ரூ.4 கோடி விவகாரம் - கோவர்தனை சுத்து போடும் சிபிசிஐடி.!! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரயில் நிலையத்தில்  நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்தனுக்கு உடல்நிலை சரி இல்லாததால் நேரில் சென்று விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில்‌ 4 கோடி ரூபாய் பிடிபட்ட போது கோவர்தன் நடத்தி வரும் ரெஸ்டாரண்டில் பணம் பரிமாற்றம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று விக்னேஷ் என்பவரின் வீட்டுக்கு நேரில் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள்

இதுவரை 4 கோடி ரூபாய் பிடிபட்ட வழக்கில் 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

அனைவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பவும் சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cbcid planning to investigate BJP leader govardhan


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->