வாக்களித்தால் உணவகங்களில் தள்ளுபடி.. ஆட்சியர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைப் பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில் பொதுமக்களை வாக்களிக்க வைக்க தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு யுத்திகளை கையில் எடுத்துள்ளனர். 

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பொதுமக்களை வாக்கு செலுத்த ஊக்குவிக்கும் வண்ணம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். 

அதன்படி மக்களவைத் தேர்தலில் வாக்கு செலுத்தியமை அடையாளத்தை சாப்பிடச் செல்லும் போது காட்டினால் உணவகங்களில் 5% தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். இந்த சலுகை ஏப்ரல் இருபதாம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் உள்ள உணவகங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chengalpattu collector announced Discount on food if you vote


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->