சென்னை: விபத்தில் காதலி பலி! அடுத்த நொடியே உயிரைவிட்ட காதலன்!
Chengalpattu Mamallapuram Road Accident Lovers Death
சென்னை ஈசிஆரில் சினிமா பாணியில் காதலி விபத்தில் பலியானதும், பேருந்தில் பாய்ந்து காதலன் தற்கொலை செய்துகொண்ட சமத்துவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகத்தை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த காதலர்கள், மாமல்லபுரம் சுற்றுலா சென்ற நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மதுராந்தகத்தை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த காதலர்கள் பயணம் செய்துள்ளனர்.
அப்போது, புதுச்சேரி அரசு பேருந்தை முந்தி செல்ல இருசக்கர வாகனத்தில் வந்த காதலர்கள் முயன்ற போது விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் பின்னல் அமர்ந்திருந்த காதலி சபரீனா (20 வயது) சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த காதலன் யோகேஸ்வரன் (19 வயது), அதிர்ச்சியில், அந்த வழியாக பேருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இருவரின் உடலையும் மீட்ட மாமல்லபுரம் போலீசார், சமத்துவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொள்ளுதல் சட்டப்படி குற்றம்: தற்கொலை செய்யும் எண்ணம் வந்தால் உடனடியாக கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும்:
சினேகா உதவி மையம் - 044 2464000
மாநில உதவி மையம் - 104
English Summary
Chengalpattu Mamallapuram Road Accident Lovers Death