துர்கா பூஜையை ஒட்டி கைதிகளுக்கு மட்டன் பிரியாணி! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய பண்டிகையாகக் கருதப்படும் துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன. இந்த நிகழ்வுக்காக, மாநில சிறைத்துறை அதிகாரிகள் விசேஷ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். 

துர்கா பூஜையை முன்னிட்டு, சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மட்டன் பிரியாணி மற்றும் பசந்தி புலாவும் உணவாக வழங்கப்படும். நவராத்திரியின் 9 நாட்களுக்கும், கைதிகளுக்கு இந்த புதிய உணவு வகைகள் வழங்கப்படவுள்ளது. 

இந்நிலையில், கைதிகளே சமையற்காரர்களாக பணிபுரிந்து இந்த உணவுகளை சமைக்க உள்ளனர். கைதிகளின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், விருப்பப்படும் கைதிகளுக்கு மட்டும் அசைவ உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பண்டிகை காலத்தில் கைதிகளுக்கு மகிழ்ச்சி மற்றும் அனுபவங்களை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mutton biryani for prisoners on Durga Puja


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->