7 தீர்மானம்: அண்ணாமலை தலைமையில் ஒன்று கூடிய தமிழிசை, முருகன்!
Chennai BJP Annamalai meeting SivarajSingh Lmurugan Tamilisai
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நடைபெற்றப்பட்டுள்ளன.
சென்னை வானகரத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் பங்கேற்றுள்ளார்.
மேலும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நடைபெற்றப்பட்டுள்ளன.
முன்னாள் நீதிபதி சந்துரு அளித்த அறிக்கையை கண்டிப்பதாக இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்துமத அடையாளங்களை அழித்தொழிக்க நினைக்கும் சந்துருவின் அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரியும் இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவிக்கையில், தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை ஆகத்தான் உள்ளது. தமிழகத்தில் அனைத்து இடத்திலும் சாதாரண மனிதர் கூட உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று, பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையையை சுட்டிக்காட்டி, தமிழக அரசு மீதும், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்தும் அண்ணாமலை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chennai BJP Annamalai meeting SivarajSingh Lmurugan Tamilisai