மது போதையில் பயணி தாக்கியதில் சென்னை மாநகர பேருந்து நடத்துனர் பலி! - Seithipunal
Seithipunal


சென்னையில் அரச மாநகர பேருந்து நடத்துனர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரவு 7 மணி அளவில் சென்னை அமிஞ்சிக்கரையில் பேருந்தில் பயணித்தபோது ஏற்பட்ட வாய்த் தகராறில் மாநகரப் பேருந்து நடத்துனர் ஜெகன் குமார் என்பவரை பயணி தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, MKB நகரில் இருந்து கோயம்பேடு வழித்தட எண் 46-G இல் இயக்கப்படும் MTC பேருந்து முல்லை நகர் பேருந்து நிலையத்திலிருந்து இரவு 7.30 மணியளவில் சுமார் 30 பயணிகளுடன் சென்றுள்ளது.

பேருந்து நடத்துனராக சைதாப்பேட்டையை சேர்ந்த 52 வயதுடைய ஜெகன் குமார் பணியில் இருந்து உள்ளார்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த வேலூரை சேர்ந்த 53 வயது உடைய கோவிந்தனுக்கும் நடத்துனர் ஜெகன் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் கோவிந்தன் நடத்துனர் ஜெயகம் குமாரை தாக்கியுள்ளார். நடத்துனர் ஜெகன் குமாரும் பதிலுக்கு கோவிந்தனை தாக்கியதாக தெரிகிறது. 

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் விட்டு போல சார் மருத்துவமனைகள் அனுமதித்தனர். 

இதில் ஜெகன் குமார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழிகளையே உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நடத்துனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த மற்ற மாநகர பேருந்து ஓட்டுநர்கள் நடத்தினார்கள் போராட்டத்தில் இறங்கினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai bus conductor brutal mother


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->