மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் திமுக அமைச்சர் - அதிமுக ஜெயக்குமார் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், சிறைபிடிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுக்கள் கண்டுகொள்ளவில்லை என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தொடர்ந்து தாக்கப்படும் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களை மத்திய-மாநில அரசுகள் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்?

தேர்தல் வரும் போது மட்டும் தான் உங்களுக்கு மீனவர்கள்(பரதவர்கள்) நியாபகம் வருமா?

கூணங்குப்பம் முதல் நீரோடி வரை 1060கி.மீ தொலைவிற்கு பரவி வாழும் மீனவர்கள் (பரதவர்கள்) பல்வேறு இன்னல்களையும் அரசின் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகின்றனர்!

மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மீன்வளத்துறை அமைச்சர், இனியாவது மீனவர்கள் (பரதவர்கள்) மீது கவனம் செலுத்துவாரா?" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar Condemn to DMK Minister


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->