சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில்!! முக்கிய ஏஜென்ட் கைது!! - Seithipunal
Seithipunal


ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை இரண்டு முறை ஜாமினில் வெளி எடுத்த பெண் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அந்த வழக்கு தொடர்பான முக்கிய ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வீசிய கருக்கா வினோத் கை குண்டர் சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தியது என்.ஐ.ஏ. இது தொடர்பாக கருக்கா வினதை இரண்டு முறை ஜாமினில் வெளியே எடுத்தவர் வீட்டில் என்.ஐ. ஏ சமீபத்தில் சோதனை நடத்தியது. இதற்கு முன்பு கருக்கா வினோத் தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி எது குறிப்பிடத்தக்கது.

தேசிய புலனாய்வு அமைப்பினர் கருக்கா வினோத்தை ஜாமினில் வெளியே எடுத்தவர் யார் என்ற கேள்வி எழுந்தது, இதனை அடுத்து கருக்கா வினோத் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது. சென்னை டி நகர் டாக்டர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த நதியா (37) என்பவரின் வீட்டிலும் சோதனை நடந்தது. அதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அது தொடர்பாக நதியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது அப்போது அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில் அதில் பள்ளிக்கு செல்லும் சிறுமிகளின் ஆபாச படங்கள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை வளசரவாக்கம் பகுதியில் பள்ளி சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. அதற்கு அடியாளாக கருக்கா வினோத்தை வைத்திருந்ததும் தெரிய வந்தது. 

சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் நதியா, அவரது உறவினர்கள் சுமதி, ஜெயஸ்ரீ, உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய ஏஜென்ட்டாக செயல்பட்ட விஜயலட்சுமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai school girls sex work important agent arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->