தமிழக மீனவர்கள் மீட்கக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 கடந்த மார்ச் 7ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 16 தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது கைது நடவடிக்கை தொடர்ந்து வருவதால் மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 16 மீனவர்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படை நாள் கடந்த 12ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் இது 3வது முறையாகும்.

இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படல்களையும் உடனடியாக விடுவிக்க தூதரகம் வாயிலாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister M.K.Stalin letter to Central Government to rescue Tamil Nadu fishermen


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->