ராணிப்பேட்டை || பட்டாசு விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் அருகே நேற்று பட்டாசு வெடித்த விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக மியூதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று (நேற்று) பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி சிறுமி நவிஷ்கா உயிரிழந்தார். இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், இந்தவிபத்தின்போது பலத்த காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin compensation announce to girl died family in ranipet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->