இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஆசிரியை பலி! கோவையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal



கோயம்புத்தூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

கோவை, உக்கடம் பகுதியில் இருந்து இன்று காலை பள்ளி ஆசிரியை ஒருவர் இருசக்கர வாகனத்தில் அவர் பணியாற்றிய தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஆசிரியை தூக்கி வீசப்பட்ட நிலையில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசிரியை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனை அடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால் டிப்பர் லாரியை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். 

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore lorry collided two wheeler teacher killed 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->