இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் மீது டெம்போ ஏறி இறங்கியதில் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் மீது டெம்போ ஏறி இறங்கியதில் உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் தீபக்(19). இவர் களியக்காவிளை அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை தீபக் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது களியக்காவிளை பகுதி அருகே சென்ற போது, நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த டெம்போ எதிர்ப்பாராதவிதமாக தீபக் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் தீபாக் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டெம்போ ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College student killed in accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->