மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி.! ஓட்டுநர் கைது - Seithipunal
Seithipunal


சென்னையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் லிங்கேஸ்வரன்(21) தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் லிங்கேஸ்வரன் என்று அதிகாலை கிண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அசோக் பில்லர் சந்திப்பு அருகே சென்ற போது, அவழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென லிங்கேஸ்வரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லிங்கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து போலீசார், உயிரிழந்த லிங்கேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College student killed in motorcycle lorry collision in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->