இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களின் மீது கண்டெனர் பெட்டகம் விழுந்து இருவர் பலி.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர்களின் மீது கன்டெய்னர் பெட்டகம் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தங்கையுடன் மணலி புதுநகர் அருகே உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.

இருவரும் கோவிலிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது எண்ணூர் மணலி விரைவு சாலையில் அதிவேகமாக எதிர் எதிரே வந்த இரு லாரிகள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கன்டெய்னர் பெட்டகம் சாலையில் சென்று கொண்டிருந்த சீனிவாசன் மற்றும் அவரது தங்கையின் மீது விழுந்துள்ளது.

இருவரும் கண்டனர் பெட்டகத்தின் அடியில் சிக்கிக்கொண்ட நிலையில் பரிதாபமாக உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தலைமறைவான லாரி டிரைவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Container falls into bike accident two person died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->