தொடர் கனமழை: மீண்டும் புதுச்சேரிக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் கடந்த பெஞ்சல் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தி 50 செ.மீ. மழையை ஒரே நாளில் கொட்டியதால் பல்வேறு இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், துணை மின்நிலையங்கள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. முதற்கட்ட மதிப்பீட்டில் ரூ.600 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புயலுக்குப் பின் புதுச்சேரி நகர பகுதி சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பியபோதும், கிராமப்பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் உள்ளன. அணைகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 16-ம் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நேற்று மழை விட்டு விட்டு பெய்த நிலையில், இன்று அதிகாலை முதல் புதுச்சேரி முழுவதும் தொடர்மழை பெய்து வருகிறது. புதுச்சேரி விமான நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் புறவழிச்சாலை, ஆரோவில் பகுதிகளில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மழை எச்சரிக்கையையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மின்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என மீண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்துடன் வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.தென்பெண்ணை ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் நிவாரண முகாம்களில் தங்குமாறு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார். தேசிய பேரிடர் பாதுகாப்பு குழு மீண்டும் புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டு செயல்படுகிறது.பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் நிலைகளின் நிலை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் கீழ்நிலங்களின் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருந்தும், அரசு உதவிகளைப் பயன்படுத்தியும் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Continued heavy rain Disaster relief team rushed to Puducherry again


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->