தொடர் செயின் பறிப்பு - கொள்ளையனுக்கு 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் அடுத்தடுத்து 6 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்திருந்த 2 மர்ம நபர்கள் இந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். 

இரண்டு கொள்ளையர்களையும் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்துக்குள் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களின் பெயர் ஜாபர் குளாம் உசேன் இரானி, மேஷம் இரானி என்பது தெரிய வந்தது. மேலும், இவர்கள் இரானிய கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதில் ஜாபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தொடர் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சல்மான் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

court custody till april 9th to chennai chain robbery accuest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->