சபாநாயகர் அப்பாவுக்கு நெருக்கடி! நேரம் குறித்த உயர்நீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


அவதூறு வழக்கில் இன்று மதியம் 2.30 மணிக்கு நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு, எம்.பி.-எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இவரது பேச்சு அ.தி.மு.க. வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கூறி சபாநாயகருக்கு எதிராக, அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இந்த வழக்கு விசாரணை தொடர்பாக செப்டம்பர் 9-ந் தேதி நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக நிலையில், மதியம்  2.30 மணிக்கு நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court order to assembly speaker appavu for admk case sep


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->