லாரியின் மேல் இருந்து கீழே விழுந்த ஒட்டுநர் பலி, மதுபோதையில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


லாரியில் இருந்து விழுந்த ஒட்டுநர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. ஒட்டுநரான இவர்  கடந்த 7ம் தேதிபுனேயில் இருந்து பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூருக்கு வந்துள்ளார். திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப்புகளை இறக்கி விட்டு மது அருந்தியதாக தெரிகிறது. 

இரவில் அய்யப்பன் மற்றும் செல்வமணி இருவரும் லாரியின் மேலே உறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக செல்வமணி லாரியில் இருந்து கீழே விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அய்யப்பன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Driver death in thiruvallur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->