"தில் இருந்தா வண்டிய விடுங்கடா"..நடுரோட்டில் அலப்பறைக் காட்டிய போதை ஆசாமி..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் எடப்பாடி தாவாந்தெரு பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று மாலை மதுபோதையில் தள்ளாடியபடி எடப்பாடி- பூலாம்பட்டி பிரதான சாலையில் நடந்து சென்றார். அங்கு அவர் திடீரென சாலையின் நடுவே சாக்குப்பையை விரித்து படுத்துக்கொண்டார். 

அப்போது அவர் மது போதையில் `யாருக்காவது தில் இருந்தா என் மீது வண்டியை விடுங்கடா பார்ப்போம்' என்று கூறியவாறு படுத்திருந்தார். அந்த வழியாக வந்த பொதுமக்கள் போதை ஆசாமியிடம் அங்கிருந்து எழுந்து செல்லுமாறு தெரிவித்தனர். 

ஆனால் அவர் யார் சொல்வதையும் கேட்காமல் நீண்ட நேரமாக சாலையின் நடுவே படுத்திருந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி வாலிபர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு சாலையில் படுத்திருந்த போதை நபரை எழுப்பிக் கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drunk man sleep road in salem


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->