எடப்பாடி குறித்து அவதூறு: தி.மு.க ஆதரவாளருக்கு எதிராக அ.தி.மு.க வழக்கறிஞர் அணி பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலாவின் ஆதரவாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து வெளியேறியதும் கட்சியை காப்பாற்ற சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை 10 நாட்கள் ஒரு பிரபல ஹோட்டலில் தங்க வைத்தார். 

அது குறித்து அ.தி.மு.கவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி ஏ.வி. ராஜு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

ஹோட்டலில் எத்தனை நடிகைகளை கூட்டி வந்தார்கள் தெரியுமா, எம்.எல்.ஏ வெங்கடாசலம் நடிகை திரிஷா வேண்டும் என அடம் பிடித்தார். இதனால் நடிகர் கருணாஸ் ரூ. 25 லட்சம் கொடுத்து த்ரிஷாவை அழைத்து வந்தார் என தெரிவித்துள்ளார். 

இந்த குற்றச்சாட்டு திரிஷா ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் த்ரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் சேரன், ஆர். கே. செல்வமணி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசி காணொளி வெளியிட்ட விவகாரத்தில், தி.மு.க ஆதரவாளர் ஸ்ரீவித்யாவுக்கு எதிராக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அ.தி.மு.க வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi defamation DMK supporter against complaint 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->