பராமரிப்பு பணி - சென்னையில் மின்சார ரெயில்கள் ரத்து.!
electric train service cancelled in chennai
சென்னையில் பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சென்டிரல் - கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் உள்பட 18 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "சென்டிரலில் இருந்து காலை 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரலில் இருந்து காலை 10.15 மதியம் 12.10, 1.05 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து காலை 11.45 மதியம் 1.15 மாலை 3.10, இரவு 9 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரையில் இருந்து காலை 9.40 மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.50, மதியம் 2.30, மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.
கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
electric train service cancelled in chennai