எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் மரணம்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


சென்னை வடபழனியில் எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் கேம்ஸ்(63). இவர் இன்று காலை அதே பகுதியில் அலுமினிய பொருட்கள் விற்பனை செய்யும் கடை முன்பு தலையில் அடிபட்ட காயங்களுடன் மர்ம முறையில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து வடபழனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜேம்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜேம்ஸ் யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electrician dies mysteriously in Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->