நகராமல் நிற்கும் நகரும் படிக்கட்டுகள் - எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ரெயில் நிலங்களிலேயே தென் மாவட்ட ரெயில்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய ரெயில் நிலையமாக சென்னை எழும்பூர் ரெயில் முனையம் திகழ்கிறது. மொத்தம் 11 நடைமேடைகள் உள்ளன. இதில் 4-வது நடைமேடையே பிரதான நடைமேடையாக உள்ளது.

இந்த நடைமேடைகளில் இருந்து ரெயில் நிலையத்தின் முன்பகுதி மற்றும் பின் பகுதி செல்வதற்கு என்று இரண்டு பிரதான நடைமேம்பாலங்கள் உள்ளன. இதனை சென்றடையும் வகையில் ஒவ்வொரு நடைமேடையில் இருந்தும் படிக்கட்டுகள் உள்ளன. அதன் ஒரு பகுதி, நகரும் படிக்கட்டுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பெரும்பாலான பயணிகள் நடைமேடை 4-ல் உள்ள நகரும் படிக்கட்டின் வழியாக நடைமேம்பாலத்தில் ஏறி 5 முதல் 11 வரையிலான நடைமேடைகளுக்கு செல்வது வழக்கம். ஆனால், இந்த பிரதான நகரும் படிக்கட்டுகள் பெரும்பாலான நேரங்களில் நகராமல் நிற்கும் நிலையே காணப்படுகிறது. இதனால், பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். 

தாங்கள் பயணிக்க இருக்கும் ரெயில்களின் புறப்பாடு நேரத்தின் மிக குறுகிய கால அளவில் வேக வேகமாக வரும் பயணிகள் நகரும் படிக்கட்டுகள் வழியாக விரைந்து சென்று தங்கள் ரெயில்களை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் வரும் போது, நகரும் படிக்கட்டுகள் நகராமல் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

escalator not working in chennai ezhumbur railway station


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->