சென்னையில் மின்சார ரெயில்கள் ரத்து - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த சில வாரங்களாகவே ரெயில்வே பராமரிப்பு பணி நடைபெறுவதால், மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் புறநகர் பகுதிக்கு மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக்கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

"சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக எழுபது பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 20 பேருந்துகளும் கூடுவாஞ்சேரிக்கு 30 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர் பிராட்வேவுக்கு கூடுதலாக 20 பேருந்துகள் இன்று முதல் 15-ம் தேதி வரை இயக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

extra bus run in chennai for electric train cancelled


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->