கடலூர் அருகே பரிதாபம்.! ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.32 லட்சம் கேட்டு மிரட்டியதால் விவசாயி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ. 32 லட்சம் கேட்டு மிரட்டியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் வேம்பூர் அருகே பெரியநெசலூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் விவசாயி ராஜ்குமார்(39) திடீரென நேற்று முன்தின மாலை தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதை பார்த்த உறவினர்கள், உடனடியாக ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக வேம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ராஜ்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம்மும் அடவைக்காலத்துறை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 லட்சமும் கடன் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து ராஜ்குமார் கடனை திருப்பி செலுத்திய பிறகும், அந்தப் பெண் தனக்கு ரூ.32 லட்சமும், அந்த நபர் ரூ.8 லட்சமும் தர வேண்டும் என்று கூறி ராஜ்குமாரை ஆபாசமாக திட்டி மிரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜ்குமார் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer suicide due to debt problem in Cuddalore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->