கடன் தொல்லையால் தந்தை மகள் தற்கொலை.. கரூர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


கடன் தொல்லையால் தந்தை மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே உள்ள காந்திகிராமம் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் முகமது பரீத். இவருக்கு திருமணமாகி  இரண்டு குழந்தைகள் உள்ளனர். முகமது அங்குள்ள  வங்கியில் கடன் பெற்றுபுதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கிடையில்,  கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மந்திரித்த தண்ணீர் எனக் கூறி மனைவி நஸ்ரின்பானு மற்றும் ஜகிந்நாஜ் ஆகியோருக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு அவரும் அதை குடித்துள்ளார். உறவினர் ஒருவருக்கு போன் செய்து விஷம் அருந்தியதை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். 

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜகிந்நாஜ் மற்றும் முகமதுபரீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father and daughter committed suicide


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->