கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்.! மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை - மகள் பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் பவானி அருகே கோவிலுக்குச் சென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (50). இவரது மனைவி நிர்மலா இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு, கந்தசாமி, அவரது மனைவி நிர்மலா மற்றும் மகள் சிவ நந்தினி ஆகிய மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதையடுத்து அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு குமாரபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது பவானி அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பலத்த காயம் அடைந்த நிர்மலா மற்றும் சிவ நந்தினி அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவ நந்தினி உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த கந்தசாமி மற்றும் சிவ நந்தினி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father and daughter killed in motorcycle accident in erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->