மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - மகள் கண்முன்னே தந்தை பலி.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் மஞ்சநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் அரசு பேருந்து கண்டக்டர் பாலகிருஷ்ணன்(54). இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தின மாலை பாலகிருஷ்ணன் மகள் சிவரஞ்சினியுடன் (13) ஆதனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆதனூர் அருகே சென்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்த நிலையில், மகள் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சிவரஞ்சனி பலத்த காயமடைந்த நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father killed in motorcycle car accident in dharmapuri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->