கோவை || ஆன்லைன் மூலம் போதைப்பொருள் விற்பனை - 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிகளில், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். இவர்களைக் குறிவைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்கும் கும்பல் செயல்பட்டு வருகிறது. 

இந்தக் கும்பல் ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை போதை மருந்துக்காக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதனைத் தடுக்க போலீசார் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சுங்கம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அவர்களிடம் 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுகுறித்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து அதனை போதை மாத்திரைகளாக கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested in coimbatore for drugs sales


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->