பரபரப்பு.. சண்டையை தடுக்கச் சென்ற போலீசார் மீது சராமரித் தாக்குதல் - 4 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் சம்பவம் குறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அப்போது போலீசாருக்கும் திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், அங்கிருந்த வாலிபர்கள் போலீசாரை கீழே தள்ளியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோட்டார் வைத்தியநாத புரத்தை சேர்ந்த விக்னேஷ், செல்வபிரகாஷ், செல்வசூரியாபிரதீப், தெங்கம்புதூரை சேர்ந்த சந்தோஷ், தாழக்குடியைச் சேர்ந்த அஜித், பறக்கையை சேர்ந்த ஆறுமுக முத்துப்பாண்டி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தகராறைத் தடுத்து சமாதானம் செய்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four peoples arrested for attack pplice officer in kanniyakumari


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->