#சேலம் || காதலனின் தந்தையை போட்டு தள்ளிய காதலியின் குடும்பம்! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே தென்னம்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரனின் 25 வயது மகன் பிரசாந்த் அதே பகுதியை சேர்ந்த 18வயது பெண்ணும் காதலித்து வந்தனர்.

இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு அடுத்த கட்டத்திற்கு சென்று கைக்கலப்பாக மாறி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பிரசாந்தின் தந்தை குணசேகரனை அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த கொடுர தாக்குதலில் பலத்த காயமடைந்த குணசேகரனை அவரது குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குணசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகேசன், சிவக்குமார் ஆகியோரை கைது செய்த கொலை வழக்குப் பதிவு செய்ததோடு விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதல் விவகாரத்தில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Girlfriend family murdered her boyfriend father in love matter


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->