குழந்தைக்கு பிஸ்கெட்! திறந்துபார்த்த தங்கம்! சென்னையில் விமானநிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக துபாய்யில் இருந்து தங்கம் கடத்திவருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை விமானநிலையத்தில் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து தங்கம், இசிகரெட் போன்றவைகள் கடத்தப்பட்டு வருவது வேதனைக்குரிய உண்மை.

சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெரில் இன்று துபாயில் இருந்து சென்னை வந்த இரண்டு விமானங்களில் வந்து பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது இரண்டு பெண்கள் உட்பட 10 பயணிகளிடமிருந்து ரூ. எட்டு கோடி மதிப்புள்ள 12.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அவர்களை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன தங்கத்தை கடத்தி வந்த பயணிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அதிகாரிகள் வெளியிடவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold worth Rs 8 crore seized at Chennai airport


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->