மயிலாடுதுறை || தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் - புகாரால் சிக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மங்கைநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வயிற்று வலியால் அவதிப்பட்ட தனது 12 வயது மகன் கிஷோரை, மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தேன். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், குடல் வால் அழற்சி ஏற்பட்டு இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

அறுவை சிகிச்சைக்காக பணத்தை செலுத்திய பின், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் அபினவ் என்பவர் அறுவை சிகிச்சை முன் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் தன் மகன் கிஷோரை சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கிஷோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தனியார் மருத்துவமனை மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியரின் குறைத் தீர்வு முகாமிலும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தன்னுடைய மகன் உயிரிழப்புக்கு காரணமாக மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி, அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கதிரவன் ஆஜராகி, அரசியல் செல்வாக்கு இருக்கும் மருத்துவர்கள் மருத்துவமனையில் பணியாற்றுவதால் மருத்துவ நிர்வாகத்தினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அறுவை சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட மயக்க மருந்து அதிகமானதன் காரணமாகவே கிஷோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இதைக்கேட்ட நீதிபதி, அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மயக்கவியல் மருத்துவர் அபினவ் ஏன் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க சென்றார். அவர் மீது பணிநீக்க நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு மயிலாடுதுறை ஆட்சியர், மருத்துவ கல்வி இயக்க இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government hospital doctor work private hospital in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->