மாணவர்களுக்கு குட் நியூஸ்! இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை! பள்ளி,கல்லுரிகளுக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் விளைவாக, தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

திருவாரூரில், நேற்று வெயில் காணாமல் இருண்ட வானம் நிலவியது. தொடர்ந்து, இடையிடையே தூறல் மழை பெய்தது. மாலை நேரத்திலிருந்து அந்த பகுதியில் மழை தொடர்ந்து பெய்துவருவதால், மாவட்ட கலெக்டர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். 

மழை காரணமாக பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைகளை கவனமாக நடத்துமாறும், தேவையற்ற வெளியே வராமலும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rain Holiday notice for school college in Tiruvarur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->