அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை - வானிலை மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை - வானிலை மையம் தகவல்.!

தென் இந்திய பகுதிகளில் உள்ள மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதைத்தொடர்ந்து நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ,திருவள்ளூர் ,நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

heavy rain in eighteen districts next three hours


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->